செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

Jul 01, 2022 10:38:26 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து சந்தோஷ்குமாரை காணாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடிய பிறகு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் ஆற்றில் ஆண் சடலமொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது அது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு மாதமாக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்ற வசந்தகுமாரியின் ஆண் நண்பர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் இவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டு அதில் சந்தோஷ்குமாரை வசந்தகுமாரியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வசந்தகுமாரி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
சாலையில் பூசணிக்காயை உடைச்சிப் போட்டா விபத்து எப்படி குறையும் ஆபீசர்? ராஜதந்திரங்கள் வீணான தருணம்
சினிமா பிரமுகரின் கார்மோதி துணை நடிகர் பலி.. கார் ஏற்றிக் கொலை என புகார்..! போதையன் சொன்ன கதை என்ன ?
56 மணி நேர போராட்டம்... சடலக் குவியலில் இருந்து உயிரோடு வந்த தொழிலாளி..!
காட்டுத் தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமா? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்
புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்
நீ தான் ரோட்டுல உட்காருவியா.. நாங்கள் துண்ட விரிச்சு படுப்போம் கள்ள மது விற்போர் அட்ராசிட்டி..!
ஊரார் பணத்தை ஏமாற்றியதால் ஆத்திரம்.... மரத்தில் கட்டிவைத்து உரித்த சம்பவம்...!
கத்தியுடன் குப்புற விழுந்த குடிகார சண்டியர்களுக்கு மங்களகரமாக மாவுக்கட்டு.... ஒரே இரவில் அடுத்தடுத்து அட்டூழியம்..!
பாட்டில் விற்றால் பிடிப்பியா..? செருப்பை எடுத்து போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...! அமைச்சரின் பெயரை சொல்லி அச்சுறுத்தல்
மேடத்துக்கு.. ப்ரீயா பிரட் ஆம்லெட் தரமாட்டியா..? ஓனர்... ஸ்டேசனுக்கு வாப்பா..! ‘கமர்கட்டு’ களவாண்ட காட்சிகள்

Advertisement
Posted Jun 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலையில் பூசணிக்காயை உடைச்சிப் போட்டா விபத்து எப்படி குறையும் ஆபீசர்? ராஜதந்திரங்கள் வீணான தருணம்

Posted Jun 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

சினிமா பிரமுகரின் கார்மோதி துணை நடிகர் பலி.. கார் ஏற்றிக் கொலை என புகார்..! போதையன் சொன்ன கதை என்ன ?

Posted Jun 09, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

56 மணி நேர போராட்டம்... சடலக் குவியலில் இருந்து உயிரோடு வந்த தொழிலாளி..!

Posted Jun 09, 2023 in உலகம்,Big Stories,

காட்டுத் தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமா? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்

Posted Jun 08, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்


Advertisement