பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஹைதராபாதில் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் புதிய படத்துக்காக வந்த தீபிகா தமது உடல் நிலை சரியில்லை என்றும் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறியதை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.