தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, 30 ஆயிரத்து 215 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 296 பேருக்கும், கோவையில் மேலும் 3 ஆயிரத்து 786 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 742 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 24 ஆயிரத்து 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 46 பேர் உயிரிழந்த நிலையில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.