தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மேலும் 7 ஆயிரத்து 38 பேருக்கும், கோவையில் 3 ஆயிரத்து 653 பேருக்கும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 250 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 21 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 33 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 358 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 22 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.