செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆவடி : பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போதகர் கைது!

Apr 20, 2021 04:44:57 PM

ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு  ஆரிக்கம்பேடு, சாலோம்  நகரைச் சார்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறி வேதனை பட்டுள்ளார். இதனையடுத்து, குடும்ப கஷ்டம் தீர பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டம் தீரும் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 17- ந்தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சுக்கு தனியாக சென்று உள்ளார். அங்கு முட்டியிட்டு அந்த பெண் மனமுறுகி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த ஸ்காட் டேவிட், அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். சர்ச்சிலிருந்து கத்தியவாறே வெளியே ஓடியுள்ளார். பின்னர், இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் மத போதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதியின் உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட்டை  திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்
விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் உயர்வு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவை நகைக்கடை உரிமையாளர் தாக்கி 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை... காரையும் கடத்திய கும்பல்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement