செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எமனுடன் 7 மணி நேரம்... நான் செத்து பிழைச்சவன்டா! - சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய்

Feb 05, 2021 07:30:33 AM

கர்நாடகத்தில் சிறுத்தையுடன் கழிவறையில்   சிக்கிய தெருநாய் 7 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

தக்ஷின கர்நாடக மாவட்டத்திலுள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணியளவில் சிறுத்தை ஒன்று தெரு நாயை விரட்டி வந்துள்ளது.சிறுத்தையிடமிருந்து தப்பிக்க நாய் ஒரு வீட்டை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தது. ஆனாலும், விரட்டி சென்ற சிறுத்தை கழிவறைக்குள் புகுந்தது. இந்த சமயத்தில் கழிவறைக்குள் வந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே சிறுத்தையின் வால் தெரிந்ததை பார்த்து சுதாரித்துக் கொண்டார். உடனடியாக, கழிவறையின் கதவை அடைத்து விட்டு கூச்சல் போட்டார். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதலில் , கழிவறையின் மேல் கூரை அகற்றப்பட்டு சுற்றிலும் வலை போடப்பட்டது. இதற்கிடையே, தங்களது நடவடிக்கையால் சிறுத்தை கோபமடைந்து நாயை அடித்து சாப்பிட்டு விடும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கழிவறைக்குள் மாட்டிக் கொண்டதால் சிறுத்தையும் பயந்து போய் இருந்தது.

இதனால், நாயை தாக்க சிறுத்தை முனையவில்லை. கழிவறையின் ஒரு மூலையில் நாயும் மற்றோரு பகுதியில் சிறுத்தையும் படுத்துக் கொண்டிருந்தன. பின்னர், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மீதேறி வனத்துறை அதிகாரிகள் மதியம் 2 மணியளவில் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர். அந்த தருணத்தில் துள்ளிய சிறுத்தை வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு, அதை மீட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டில் விட்டனர். நாய் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. சிறுத்தையுடன் ஒரே அறையில் 7 மணி நேரம் இருந்த நாய்க்கு நான் செத்து பிழைச்சவன்டா என்ற பாடல் வரிகள் நிச்சயமாக பொருந்தும்.

 


Advertisement
உலக பூமி தினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!

Advertisement
Posted Jun 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலையில் பூசணிக்காயை உடைச்சிப் போட்டா விபத்து எப்படி குறையும் ஆபீசர்? ராஜதந்திரங்கள் வீணான தருணம்

Posted Jun 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

சினிமா பிரமுகரின் கார்மோதி துணை நடிகர் பலி.. கார் ஏற்றிக் கொலை என புகார்..! போதையன் சொன்ன கதை என்ன ?

Posted Jun 09, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

56 மணி நேர போராட்டம்... சடலக் குவியலில் இருந்து உயிரோடு வந்த தொழிலாளி..!

Posted Jun 09, 2023 in உலகம்,Big Stories,

காட்டுத் தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமா? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்

Posted Jun 08, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்


Advertisement