செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

'இனி நீ கவியருவி என்று அழைக்கப்படுவாய்!'- குரங்கருவிக்கு வனத்துறை பெயர் மாற்றம்

Jan 28, 2021 03:34:53 PM

கோவை குரங்கருவிக்கு , "கவியருவி" என்று வனத்துறையினர் பெயர்மாற்றம் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில், உள்ளது குரங்கருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி ,வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.பொள்ளாச்சியிலிருந்து ,30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இந்த அருவிக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பல மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் மக்கள் குடும்பத்துடன் வந்து உல்லாசமாக இந்த அருவியில் குளித்து மகிழ்வர். கொரோனா நோய் தொற்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், குரங்கருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் , தடை நீக்கப்பட்டு , சுற்றுலா பயணிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர்.

தற்போது குரங்கருவி என்று அழைக்கப்படும் இந்த அருவி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கவியருவி என்று அழைக்கப்பட்டது. அருவியை சுற்றி பறவைக்கூட்டங்கள் எழுப்பும் ஓசை மிக அழகாக இருக்கும். பறவைகளின் இசையுடன் அருவியின் தாளமும் சேர்ந்து, கேட்போர் காதுகளில் கவிதையாய் பாயும்.

இதனால் இந்த அருவியை சுற்றி வாழ்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 500 வருடத்திற்கு முன் இந்த அருவிக்கு "கவியருவி" என்று பெயர்சூட்டி அவ்வாறே அழைத்துவந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நாளடைவில், இங்கு குரங்குகள் அதிகளவில் வரத்தொடங்கியது. இதனால் இந்த அருவிக்கு குரங்கருவி என்ற பெயரும் வந்தது.

இந்நிலையில், குரங்கருவிக்கு "கவியருவி" என்று வனத்துறையினர் பெயர்மாற்றம் செய்துள்ளனர்.

மேலும், சங்ககால இலக்கியங்களில் , குரங்கிற்கு பல பெயர்கள் உண்டு. அவற்றுள் "கவி" என்ற பெயர் தேர்தெடுக்கப்பட்டு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.


Advertisement
உலக பூமி தினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!

Advertisement
Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!


Advertisement