செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்

Sep 29, 2023 08:01:58 AM

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் அதிவேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் மோதி ஏழை கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற மற்றொரு முதியவர் பலத்த காயமடைந்தார். இவர்களை காரால் அடித்து தூக்கியதாக கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அரை மணி நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து ஜாமீனில் சென்றார். 

அய்யா, அவர அடக்கம் பண்ணக்கூட காசில்லைங்க என்று தொழிலாளியின் மனைவியை கண்ணீர் விட்டு கதறவைத்திருக்கும், கீழ்ப்பாக்கம் கார் விபத்துக்காட்சிகள் தான் இவை..!

சென்னை புரசைவாக்கத்திலிருந்து, அழகப்பா ரோடு வழியாக அதிவேகத்தில் சென்ற ஹூண்டாய் ஐ டென் கிராண்ட் என்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அந்த கார் ஒரு இருசக்கரவாகனத்தை தட்டி பறக்கவிட்ட நிலையில் , சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி பழனி, பேண்ட் சட்டை அணிந்த 71 வயது முதியவர் உள்ளிட்ட 2 பேரை அடுத்தடுத்து அடித்து தூக்கிவிட்டு , சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கரவாகனங்கள் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெயிண்டிங் தொழிலாளி பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் எதிர்புறம் சாலையில் வேடிக்கை பார்த்தபடியே நடந்து வந்த 71 வயது முதியவர் யஷ்வந்தும், ஆட்டோவில் இருந்தவரும் இதில் பலத்த காயம் அடைந்தனர்.

அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நின்றிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உட்பட 4 வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தது.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பழனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது கணவர், மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், தனது கணவரின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட தன்னிடம் பணமில்லை எனக்கூறி உயிரிழந்த தொழிலாளி பழனியின் மனைவி மகேஷ்வரி கதறி அழுதார்.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெயகுமார் என்பதும், இவர் சவுகார்ப்பேட்டையில் கெமிக்கல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

ஆட்டோமெடிக் கியர் காரை ஓட்டிவந்த ஜெயக்குமார், வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்ற போது பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த கோர விபத்தை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

L போர்டு ஒட்டிய காரை பயன்படுத்தியது குறித்து கேட்ட போது , தான் ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பதாகவும், தனது மகள் மற்றும் மனைவியும் இந்த காரை இயக்குவதால் L போர்டு ஒட்டி இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஜெயகுமாரை கைது செய்த போலீசார் அரைமணி நேரத்தில் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் வகையில் அவர் மது போதையில் இல்லை, கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து என்ற போக்குவரத்து போலீசார் , பொதுவாகவே போக்குவரத்து காவல் சட்டங்கள் கடுமையாக இல்லை என்று சுட்டிக்காட்டினர்.

அதேநேரத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பிளாட்பாரத்தில் நடக்காமல் சாலையில் நடந்து சென்றதும், பாதசாரிகள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளும் , அதனை அகற்றாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனமும் இந்த உயிரிழப்பிற்கு காரணாமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.


Advertisement
நட்சத்திர விடுதியில் பணியாற்றும் வடமாநில பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை.. பெண் குற்றச்சாட்டு
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
பல ஆண்டுகால உழைப்பில் வாங்கிய பொருட்கள் சேதம்.. பாடபுத்தகங்கள் நனைந்துவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் மாணவர்கள்
9 மாதம் முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவ இடத்தில் இருந்த காவலர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த திட்டம்
துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் - சீமான் விமர்சனம்
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
தென்சென்னையில் துப்புரவு பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் மெய்யநாதன்
மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகள்.. கடும் அவதியில் சென்னை வாசிகள்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement