செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?

Sep 26, 2023 07:18:01 AM

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புதுநகரில் முக்கிய சாலையில் உள்ள காலி நிலங்களின் முன்பு பேருந்து நிழற்குடைகளை வைத்து, நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி பணம் கறப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மழைநீர் வடிகாலை காரணம் காட்டி நடந்து வரும் முறைகேடுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை மணலி புது நகரில் இரவோடு இரவாக பேருந்து நிறுத்தம் பிடுங்கி எடுக்கப்படும் காட்சிகள் தான் இவை..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புது நகர் 16 வது வார்டில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்புறம் காலி நிலத்தின் முன்பு பெரிய மரத்தையொட்டி நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பயணிகள் நிழற்குடையை அகற்ற நிலத்தின் உரிமையாளர் 2019 ஆம் ஆண்டு மாநகராட்சியில் கோரிக்கை மனு அளித்த போது, 2 லட்சம் ரூபாய்க்கு DD எடுத்து மாநகராட்சியில் கட்டினால் அகற்றித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

அந்த காலி நிலம் வேறு ஒருவரின் பெயருக்கு மாறிய நிலையில், எந்த ஒரு அதிகாரிகளின் அனுமதியும் இல்லாமல், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவோடு இரவாக அங்கு மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள இருப்பதாக கூறி 16 வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் முன்னிலையில் பேருந்து நிழற்குடை பிடுங்கி எடுக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பால் மீண்டும் அதே இடத்தில் பேருந்து நிழற்குடை நடப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு மழை நீர் வடிகால் அமைத்த போது மீண்டும் அந்த பேருந்து நிழற்குடையை அகற்றிய அதிகாரிகள் அந்த நிழற்குடையை அங்கே நடாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அந்த பெரிய மரத்தையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதால் குடியிருபோர் நலச்சங்கத்தினர் நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் வைக்க அழுத்தம் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த காலி நிலத்தின் முன்பு செங்கற்கள் இறக்கப்பட்டதோடு, சனிக்கிழமை அதிகாலை பயணிகள் நிழற்குடையை 15 மீட்டர் தள்ளி மற்றொரு காலி நிலத்தின் முன்பு அதிகாரிகள் நட்டு உள்ளனர். மரத்தைவிட்டு பேருந்து நிழற்குடையை பிரித்ததால் எதிர்ப்பு கிளம்பியது.

நிழற்குடை இருக்கும் போது சதுர அடி 2,500 ரூபாய்க்கு விலை பேசப்பட்ட அந்த காலி நிலம் அகற்றப்பட்ட பின்னர் தற்போது சதுரஅடி 6,000 ரூபாய்க்கு விலை பேசப்பட்டிருப்பதாகவும், முன்பு 30 லட்சம் ரூபாயாக இருந்த அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 72 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிழற்குடையை அகற்றியதால் பல லட்சங்கள் கைமாறியதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து செயற்பொறியாளர் சீனிவாசனிடம் கேட்ட போது, பேருந்து நிழற்குடை தள்ளி நடப்பட்டதை ஒப்புக் கொண்ட அவர், மேல்மட்டத்தில் உள்ளவர்களின் தலையீடு என்றும் தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தெரிவித்தார்

பேருந்து நிறுத்தத்தை இடம்மாற்றியது குறித்து மாநகராட்சியின் வடக்கு பகுதி துணை ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் புகார் தெரிவித்த போது, அந்த பேருந்து நிழற்குடை பழைய இடத்தில் மீண்டும் நடப்படும் என்று உறுதி அளித்தார். அதே போல மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் மண் லாரி, லாரியாக கண்டெய்னர் யார்டுகளுக்கு கொண்டு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


Advertisement
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?
தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement