செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆலைகளின் கழிவால் கிடைத்த புற்றுநோய்... சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் திணறும் மக்கள்...

Sep 24, 2023 07:57:31 AM

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் வசதி இல்லாததால் வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் ஓடும் பாசன வாய்க்காலின் நிலை தான் இது.

பளிங்கு கண்ணாடி போல பாய்ந்து ஓட வேண்டிய வாய்க்கால்கள், பார்த்தோலே அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணத்தில் ஓடுவதற்கு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளே காரணமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என முக்கிய பாசன ஆறுகளில் சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதால் இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களும், கால்நடைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலைகளின் கழிவு கலப்பதால், நொய்யல் ஆறு தற்போது கழிவுநீர் ஆறாகவே மாறி விட்டதாக தெரிவித்த சமூக ஆர்வலர்கள் காவிரிக்கும் அதே நிலை ஏற்பட்டு வருவதாகவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

கழிவுகள் கலந்த நீரையே குடிநீராக பயன்படுத்தும் மக்கள் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதோடு, ஏராளமானவர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு ஈரோடு மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இல்லை எனவும், பெங்களூரு, சென்னை, கோவைக்கு தான் செல்ல வேண்டியிருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு அமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்துவதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்துள்ள பொதுமக்கள், நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

 


Advertisement
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?
தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement