செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை..! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு

Sep 23, 2023 08:13:21 AM

குடும்ப கஷ்டத்தை போக்க ஏஜென்ஸிகளை நம்பி தமிழகத்தில் இருந்து அர்மீனிய நாட்டுக்கு வேலைக்கு சென்ற 30 இளைஞர்கள் தங்க இடமின்றியும், சாப்பாட்டுக்கு வழியின்றியும், வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.

மாதம் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் பிளஸ் டிப்ஸ்... கிடைக்கும் என்ற மோசடி ஏஜென்ஸிகளின் தேன் தடவும் வார்த்தைகளை நம்பி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து டூரிஸ்ட் விசாவில் அர்மீனியா நாட்டுக்கு சென்று தஞ்சை தமிழர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் 30 பேரும் சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரின் கிருஷ் டிராவல்ஸ் அண்ட் கல்சல்டன்ஸி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நிசான் எஜூகேசனல் கன்சல்ட்டண்ட் ஆகிய இரு நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு கை நிறைய சம்பளம் என்று அர்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

டூரிஸ்ட் விசாவில் சென்று அங்கு இறங்கிய பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது, தங்களுக்கு மதம் 20 ஆயிரம் ரூபாய் கூட வருமான வராது என்று.. அங்குள்ள ஏஜென்ஸி ஒன்று 15 நாட்கள் வேலை வாங்கி விட்டு சம்பளமும் தராமல், தங்க இடமும் கொடுக்காமல் விரட்டி உள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அரை வயிறும் கால்வயிறுமாக சாப்பிட்டும் சாப்பிடாமலும், பிச்சைக்காரர்கள் போல வீதியில் கடும் குளிரில் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இவர்களின் தவிப்பை அறிந்த சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் தலைவர் வாஹித், மற்றும் திவான் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் அர்மீனியாவில் உள்ள தெரிந்தவர்களின் இருப்பிடங்களில் தற்காலிகமாக தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏஜென்ஸிகளின் மோசடியால் அர்மீனியாவில் சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் 30 பேரையும் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க, வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த விவகாரம் குறித்து முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அங்கு தவிக்கும் 36 பேரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Advertisement
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?
தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement