செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!

Sep 21, 2023 08:14:25 AM

திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 வயது மகனை பறிகொடுத்து விட்டு பதறும் பெற்றோர்....ஒருபுறம், சிறுவனுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய திரண்டு நிற்கும் ஊரார் மறுபுறம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அடுத்த திருப்பால பந்தல் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதியினரின் 2 வயது மகன் திருமூர்த்தி, கடந்த 17 ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான்.

சம்பவம் தொடர்பாக திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் குருமூர்த்தி ஒவ்வொரு இடமாக தேடத்தொடங்கினார். அப்போது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் அறைக்குள் இருந்து துர் நாற்றம் வருவதை அறிந்து உள்ளே தேட முயன்றபோது , பூனை ஏதாவது இறந்திருக்கும் என்று ராஜேஷ் தெரிவித்ததால் தேடுவதை நிறுத்திக் கொண்டார். ராஜேஷ் வெளியில் சென்ற பின்னர் அவரது அறையில் இருந்த பழைய ஸ்பீக்கர் பாக்ஸை உடைத்து பார்த்த குருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

அந்த ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் தனது செல்ல மகன் திருமூர்த்தி அழுகிய நிலையில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு கதறினார். தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையை சடலமாக கண்ட மொத்த குடும்பத்தினரும் கதறி கண்ணீர் விட்டு அழுதனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரிடம் எம்புள்ளைய இந்த பாக்ஸில தான் அடைச்சி வச்சிருக்கான்.. என்று குருமூர்த்தி கதறி அழுதார். போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுக்கடை பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ராஜேஷைப் பிடித்து விசாரித்த போது சொத்துப் பிரச்சனை தொடர்பாக தனது அண்ணனும் , அண்ணியும் தொடர்ந்து தன்னிடம் சண்டையிட்டு வந்ததால், அவர்களது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் வைத்து அடைத்ததாக தெரிவித்தான். சமயம் பார்த்து சடலத்தை வெளியே தூக்கிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக துர்நாற்றம் வீசியதால் தான் சிக்கிக் கொண்டதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement