செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

56 மணி நேர போராட்டம்... சடலக் குவியலில் இருந்து உயிரோடு வந்த தொழிலாளி..!

Jun 09, 2023 08:44:25 AM

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர், 56 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.

எதிர்பாராத விபத்து... தூக்கி வீசப்பட்ட சடலங்கள்... சிதைந்து கிடந்த உடல் பாகங்கள்... தண்டவாளங்களில் ரத்தக்கறை... இப்படி பல குடும்பங்களின் நம்பிக்கை, கனவுகளை சிதைத்து.. பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது, கோரமண்டல் ரயிலின் கோர விபத்து...

நாட்டையே உலுக்கிய இந்த ஒடிசா ரெயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சிதைந்த உடல்கள் பாலசோரில் உள்ள பள்ளிக்கூட அறைகளில் வைக்கப்பட்டன.

சடலங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒருவர் நுழைந்தபோது, அவரது கால்களை இரு கைகள் இறுக்கிப் பற்றிக் கொண்டன. மிரண்டுபோன அந்த நபர் உற்று கவனித்தபோது தான் தெரிந்தது, சடலம் என நினைத்து தூக்கிப்போடப்பட்டிருந்த இளைஞர் உயிருடன் இருக்கிறார் என்பது. இரு கால்களையும் இழந்துவிட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபர், நான் உயிருடன் இருக்கிறேன்...கொஞ்சம் தண்ணீர் கொடுங்க என்று முனகியுள்ளார்.

உடனே அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த நபரின் பெயர் ராபின் நையா. மேற்கு வங்கத்தில் மாநிலம் சர்நேகாலி கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராபின், வேலைதேடி முன்பதிவில்லா பெட்டில் ஏறி இந்த ரயிலில் பயணித்த போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.


Advertisement
ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்
அயோத்தி ராமர் கோவில் 12 மணி நேரம் கோவில் திறக்கப்பட்டிருந்தால் 75000 பேர் சுலபமாக தரிசனம் செய்ய முடியும்... ஆலயக் கட்டுமானக் குழு தகவல்
ஜெய்சங்கர்- பிளிங்கன் பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இடம் பெறவில்லை... அமெரிக்கா விளக்கம்
தேர்வு அறையில் இடமில்லாததால் தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. கல்லூரியை நேரில் ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள்..!
பல லட்சம் பெண்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றி இருப்பதாக பிரதமர் பெருமிதம்
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தமிழக அரசின் ஏஜெண்டுகளாக செயல்படக்கூடாது : எடியூரப்பா
மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சரின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம்.. !!
கனடா அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக குற்றச்சாட்டு
மணிப்பூரில் மாயமான மாணவர்கள் சடலமாகக் கிடக்கும் புகைப்படம் வெளியானதால் பதற்றம்.. !!

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement