செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உறவு முறை தவறியதால் ஒரு வழி பாதையான விபரீத காதல் பயணம்... பெண்ணை கொன்று உயிரை மாய்த்தார்..!

Mar 19, 2023 02:38:53 PM

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனக்கு கிடைக்காத காதலி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் தானும் துக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உறவுமுறை தெரியாமல் காதலில் விழுந்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

உறவு முறை தெரியாமல் காதலில் விழுந்த இருவரால் உறவுகள் எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைத்து கதறி அழும் இந்த விபரீத சம்பவம் அரங்கேறிய இடம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடி காடு..!

இங்கு கட்டுமான வேலை செய்து வந்த 35 வயதான துரைக்கண்ணுவும் எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயதான பவித்ரா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் 15 வயது வித்தியாசம் என்ற நிலையில்

காதலன் துரைக்கண்ணு பவித்ராவுக்கு பங்காளி முறை என்று அண்மையில் தெரியவந்துள்ளது. தங்களின் முறை தவறிய காதல் திருமணத்தில் சேராது என்று கருதி துரைக்கண்ணுவுடன் பேசுவதை பவித்ரா நிறுத்திக் கொண்டார். இதனால் பவித்ரா மீது துரைக்கண்ணு கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே அம்மை நோய் தாக்கியதால் பவித்ரா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று பவித்ராவின் பெற்றோர் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த துரைக்கண்ணு நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து பவித்ராவை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான்.

தனது வீட்டிற்கு திரும்பிய துரைக்கண்ணு காதலியை கொலை செய்த வேகத்தில், தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணுவின் சடலத்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.

பங்காளி முறை உடைய பெண்ணாக இருந்தாலும் தனக்கு கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற விபரீத எண்ணத்தில் துரை கண்ணு இந்த விபரீத செயலை செய்ததாக உறவினர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்  


Advertisement
ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!
500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement