செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Aug 08, 2022 05:11:15 PM

பூந்தமல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை மற்றும் தங்ககட்டிகளை திருடிய  பைனான்ஸியர், காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்றதால் காதல் பரிசாக காதலிக்கு கார் கொடுத்தவர் களவு வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையை அடுத்த பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த பைனான்ஸியர் சேகர். இவரது தம்பி ராஜேஸ். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். குடும்பமே பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சேகரின் மனைவி திரும்பி வந்து தனது லாக்கரில் வைத்துச் சென்ற 300 சவரன் நகைகளை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.

இதையடுத்து ராஜேஸின் மனைவி நகைகள், மாமியார் தமிழ்ச்செல்வியின் 200 சவரன் நகைகளும், 5 தங்க கட்டிகளும் லாக்கரில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பைனான்ஸியர் சேகர் 550 சவரன் நகையை திருடி காதலியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது அம்பலமானது.

சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, 40 வயது சேகருக்கு வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.

தனது இளம் காதலியை திருப்திப்படுத்த ஏராளமான பணம் கொடுத்த சேகர், வீட்டிலிருந்த 550 சவரன் நகைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று ஸ்வாதிக்கு அணிவித்து மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காதல் பரிசாக ஸ்வாதிக்கு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் சொந்த வீட்டிலேயே நகைகளை அள்ளி காதலிக்கு சூடிய சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மொத்த நகைகளையும் எங்கே மறைத்து வைத்துள்ளனர் ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Advertisement
Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!


Advertisement